Thursday, April 25, 2024

அன்புக்கினிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு (2009)

بسم الله الرحمن الرحيم

முஜாஹித் இப்னு ரஸீன்

அன்புக்கினிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு

السلام عليكم ورحمة الله وبركاته

நான் TNTJ யின் கொள்கை கோட்பாடுகளுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரண்படுவதாக மௌலவி பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கூறிய விமர்சனத்தில் எவ்வளவு தவறுகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்த விளைகிறேன்.

1-எனது கொள்கை TNTJ யின் அடிப்படைக் கொள்கைகளோடு மோதுகிறது என்று காரணங்காட்டி TNTJ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி

இலங்கை SLTJ  நிர்வாகம் மாநில தலைமையால் கலைப்பு
கலைக்கப்பட்டது ஏன்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கமாக இலங்கையில்; செயல்பட்டு வந்த sltj வில் பிரச்சாரம் செய்து வந்த மௌலவி முஜாஹித் என்பவர் TNTJ வின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை SLTJ யில் பிரச்சாரம் செய்து வந்தது SLTJயின் தலைவராக இருந்த வஸ்னி அவர்கள் முன்னிலையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எந்த நபரும் TNTJவிற்கு எதிரான கருத்துகளை கூறக் கூடாது என்று நாம் கூறவில்லை.

மாறாக  TNTJ விற்கு எதிரான கருத்துக்களை கூறக்கூடியவர்கள் அது தொடர்பான விஷயங்களை  TNTJ மௌலவிகளுடன் அமர்ந்து விவாதித்து விட்டு தங்களது கருத்தை நிலை நாட்டிவிட்டுத்தான் அது தொடர்பான கருத்துக்களை வெளியில் சொல்ல வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்பதையும்இ மௌலவி முஜாஹித் அவர்கள் எந்ததெந்த விஷயத்தில்  TNTJ வுடன் முரண்படுகிறாரோ அந்தப் பட்டியலை உடனடியாக முஜாஹித் அவர்களிடம் வாங்கி அனுப்புவதோடு அது குறித்த பகிரங்க விவாதத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் SLTJ தலைவர் வஸ்னி அவர்களிடம் மாநில தலைமை தெரிவித்தது.

ஆனால் இதை கேட்டுவிட்டுச் சென்ற SLTJ நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநில நிர்வாகத்தின் கோரிக்கையை அலட்சியபடுத்தியது மட்டுமல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து முஜாஹித் என்பவர் SLTJ விற்கு மட்டும் பிரச்சாரகரில்லை அவரது பிரச்சாரத்தை SLTJ வோ அல்லது  TNTJ வோ கட்டுப்படுத்தாது என்கிற ரீதியில் முஜாஹித் எழுதிய கடிதத்தை அனுப்பியதோடுஇ நாம் கேட்ட முரண்பாடான விஷங்களின் பட்டியலை பெற்றுத் தராமல் TNTJ வை கடுமையாக விமர்சிக்கும் மௌலவி முஜாஹித் அவர்களை தொடர்ச்சியாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதால் இந்த பிரச்சனையை சரி செய்ய மாநிலத் தலைமை கடந்த 27-2-2009 அன்று நமது பிரதிநிதிகளாக மௌலவி எஸ்.எஸ்.யு சைபுல்லாஹ் காஜா அப்பாஸ் அலி அவர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

தற்போது SLTJ விற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்வித உறவும் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மியத்துத் தவ்ஹீத் – இலங்கை (TNTJ ) என்ற பெயரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கீகாரம் பெற்ற கிளை இலங்கையில் அமைக்கப்பட்டது.

2-எனது கொள்கை SLTJ யின் அடிப்படைக் கொள்கைகளோடும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரண்படுவதாக மௌலவி பீ.ஜே அவர்கள் TNTJ இணையத்தளத்தில் ஒரு கடிதமும் வெளியிட்டுள்ளார்.

TNTJ யின் கொள்கைகள்

நான் டிஎன்டீஜே யிலோ அதன் கிளையென இலங்கையில் கருதப்பட்ட SLTJயிலோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய நிருவனங்களிலோ அங்கத்துவம் பெற்றவனாகவே ஊதியம் பெறும் அழைப்பாளனாகவோ இல்லை ஆதலால் எந்த இயக்கத்தினது நிர்வாகக் கொள்கையும் என்னை கட்டுப்படுத்தாது.இது சம்பந்தமான டீஎன்டீஜே யினரின் கடிதம் எஸ்எல்டீஜே யிற்கு வந்தடைந்தபோது ஒரு விளக்கக் கடிதத்தை என்னிடத்தில் கோரினர்.அதற்கா நான் எழுதிய பதில் கடிதத்தை தளத்தில் பின்வரும் இணைப்பில் வெளியிட்டுள்ளேன்.தயவு செய்து அதனைவாசிக்கவும். 

 

இஸ்லாத்தின் அடிப்படைகளோடு எவ்வாறு முரண்படுகிறேன்!!!!!!

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு நான் முரண்படுவதாக அவர்கள் மூடலாக என்ன விடயங்கள் என்று விளக்காமல் வெளியிட்டுள்ளார்கள்.வஸ்னிக்கு முன்னால் நிரூபித்ததாகவும் சொல்லியுள்ளார்கள்.அடிப்படைக் கொள்கைகளுக்கு எவ்வாறு முரண்படுகிறேன் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.மாறாக பொத்தாம் பொதுவாக அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படுகிறேன் என்று சொல்வது மிகப் பெரிய தவறு.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்என்பது என்ன?

 

1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்; தவிர வேறு யாருமில்லை.கடவுள் நிலையென ஒரு நிலை கிடையாது.நபியாயினும் மலக்காயினும் அல்லாஹ்வுடைய பண்புகளில் எதிலும் ஒப்பாக முடியாது.அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு , நல்ல நாமங்கள் உண்டு ,பண்புகள் உண்டு ஆனால் அவன் யாருக்கும் ஒப்பானவன் அல்ல.அவனுக்கு நிகராக எதுவும் கிடையாது.அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான்.ஒவ்வொரு இரவிலும் முதல் வானத்திற்கு அவனுக்கே உரிய முறையில் இறங்குகிறான்.அல்லாஹ்வை இவ்வுலகில் காணமுடியாது.நாளை மறுமையில் முஃமின்கள் பூரண சந்திரனைக் காண்பது போன்று காண்பார்கள்.அல்லாஹ்வுடைய வார்த்தைகள் அவனது பண்புகளில் ஒன்றாகும்.அதுபடைப்புக் கிடையாது…………….இவ்வாறு அல்குர்ஆனும் ஸ{ன்னாவும் அல்லாஹ்வைப்பற்றிச் சொன்ன எதனையும் நான் நிராகரிக்கவில்லை, மாற்று விளக்கங் கொடுக்கவில்லை,வலிந்துரை செய்யவில்லை.உள்ளதை உள்ளபடி ஏற்றுள்ளேன்.பிரார்த்தித்தல், அறுத்துப் பலியிடல், நேர்ச்சை………..போன்ற வணக்க வழிபாடுகள் யாவும் அல்லாஹ்வுக்காக மாத்திரமே செய்யப்படவேண்டும் என நம்புகிறேன்.

2-முஹம்மது நபி; அல்லாஹ்வின் இறுதித் தூதராவார்.அவருக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் வந்துள்ளார்கள்.முஹம்மத் நபியிற்குப் பின்னர் நபிமார்கள் வரமாட்டார்கள். அவர்களோடு மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது.இறைத் தூதர்கள் அனைவரும் மனிதரே.ஆனால் மஃஸ_ம்கள். ஈஸா நபியைத் தவிர அனைவரும் மரணித்துவிட்டார்கள்.ஈஸா நபியவர்கள் இறுதி நாளின் அடையாளமாக இறங்கி வருவார்கள்.பின்னர் நல்லாட்சி செய்து இவ்வுலகில் மரணிப்பார்கள்.அவர்கள் தந்தையின்றி இறைவனின் அருளால் மர்யமிற்கு பிறந்த நபி அவர் இறைவனின் மகனல்ல.அவனது தூதர்.இறைவனிற்கு ஈஸா மகனென்று கிறிஸ்துவர்கள் கூறியதாலேயே காபிர்களானார்கள்…………………. இவ்வாறு அல்குர்ஆனும் ஸ{ன்னாவும் இறைத் தூதர்கள் பற்றி என்ன சொல்கிறதோ அதில் எதனையும் நிராகரித்ததில்லை.அனைத்தையும் ஏற்றிருக்கிறேன்.

3-மலக்குமார்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள்.ஜிப்ரீல் வஹீ கொண்டுவருபவர்.பல்லுருவம் எடுக்கக் கூடியவர்கள்…………இவ்வாறு வானவர்கள் பற்றி அல்குர்ஆனும் ஸ{ன்னாவும்  என்ன சொல்கிறதோ அதில் எதனையும் நிராகரித்ததில்லை.அனைத்தையும் ஏற்றிருக்கிறேன்.

4-அல்குர்ஆன் இறுதி வேதம்.அதுவே உலகப் பொதுமறை.இதற்கு முன்னரும் பல தூதர்களுக்கு பல வேதங்கள் கொடுக்கப்பட்டன.தவ்றாத்,ஸபூர், இன்ஜீல்……… என பலவேதங்கள் வழங்கப்பட்டன.அதில் தவ்றாத்தும் இன்ஜீலும் இன்று வரை இருந்தாலும் அதில் திரிபுகள் சேர்க்கைகள் தணிக்கைகள் பல நிகழ்ந்துள்ளன………………என வேதங்கள் பற்றி அல் குர்ஆனும் ஸ{ன்னாவும் எதையெல்லாம் சொல்கிறதோ அவையனைத்தையும் நம்புகிறேன்.

5-மறுமை நாளே ஈமானின் அடிப்படை.மறுமை மரணத்தின் பின்னர் இறைவன் தீர்ப்பளித்துக் கூலி தரும் நாள் அந்நாளில் இணைவதை;தவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். மற்றப் பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்……மறுமை பற்றிய அனைத்துச் செய்திகளையும் எந்த வலிந்துரையுமின்றி அல்குர்ஆனும் ஸ{ன்னாவும் சொன்னபடி ஏற்றுள்ளேன்.

6-கத்ர் இறைவன் ஒன்றை தீர்மானித்தல் எழுதுதல் நாடுதல் படைத்தல் அனைத்தையும் குறிக்கும். இறைவனது விதிப்படியே அனைத்தும் நடக்கும். அவன் நாடாதவைகள் நடக்காது. அவனது நாட்டமின்றி சொர்க்கம் போகவே நரகம் போகவோ முடியாது. மனிதனுக்கு தன்னைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தோடே படைக்கப்பட்டிருக்கிறான். கத்ருடைய முழுமையான விளக்கத்தை அல்லாஹ் மாத்திரமே அறிந்தவன்………………என கத்ர் பற்றிய அனைத்து ஆதாரப்பூர்வமான செய்திகளையும் ஏற்றுள்ளேன்.

7-நபித் தோழர்களை நேசிப்பது ஈமானில் ஓர் அங்கமாகும். நபித்தோழர்களே முஹம்மத் நபியை ஈமான் கொண்டவர்களில் மிகச் சிறந்தவர்கள். அவர்களில் சிலர் சொர்க்கம் வாக்களிக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரும் பல படித்தரங்களைக் கொண்டவர்கள். அவர்களை நேசிப்போம் தூற்றமாட்டோம். பத்ரிலும் ஹ{தைபியாவிலும் களந்து கொண்ட அனைவரையும் இறைவன் பொருந்திக் கொண்டான் . அவர்களது கூற்றுக்களோ செயற்பாடுகளோ மார்க்க ஆதாரம் கிடையாது………………………. என அல்குர்ஆன் ஸ{ன்னா சொல்லும் அவர்கள் பற்றிய அனைத்து நம்பிக்கைகளையும் ஏற்றுள்ளேன்.

8-இறைவனை நம்பி அஞ்சி வாழ்பவர்களே இறை நேசர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் எவர்களை இறை நேசர்கள் எனச் சொன்னார்களே அவர்களை மாத்திரம் இறை நேசர்களென சாட்சி சொல்வோம். பிறரை அவரது நடவடிக்கைகளை வைத்து நல்லவர்கள் என நம்புவோம். சாட்சி பகரமாட்டோம்.

9-மறுமை நாளின் மிகப்பெரிய அடையாளங்கள் என அல்குர்ஆனிலும் ஸ{ன்னாவிலும் சொல்லப்பட்டுள்ள தஜ்ஜால், ஈஸா நபியுடைய வருகை, சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், மக்களோடு பேசும் ஒரு பிராணி வெளியாகுதல், யஃஜூஜ் மஃஜூஜ் வெளியாகுதல், மஹ்தியின் வருகை ………………என  அனைத்தையும் வலிந்துரை செய்யாமல் திரிபு இல்லாமல் நம்புகிறேன்.

10-அதிகாரமுள்ள இஸ்லாமிய ஆட்சியொன்று வருமாயின் அந்த ஆட்சியாளரிடம் தெளிவான இறை நிராகரிப்பைக் காணாத வரை விருப்பாயினும் வெறுப்பாயினும் கட்டுப்படவேண்டும்.அவரின் பின் நின்று போராடவேண்டும்.அவரில் தவறுகள் காண்பின் நளினமாக முறைப்படி திருத்தவேண்டும் ஆட்சிக்கெதிராக  திரளக் கூடாது.இது அதிகாரமுள்ள இஸ்லாமிய ஆட்சியாளருக்கு மட்டுமே என ஆட்சியாளர் பற்றி இஸ்லாம் கூறும் அனைத்தையும் வலிந்துரை செய்யாமல் ஏற்கிறேன்.

11-மறைவான அறிவு தனக்குத் தெரியும் என வாதிடுகின்ற குறிகாரனையோ மைவெளிச்சம் பார்ப்பவனையோ ஜின் வைத்திருக்கிறேன் எனச் சொல்பவனையோ உண்மைப்படுத்துவது இறை நிராகரிப்பாகும்.சூனியம் கற்பதோ கற்பிப்பதோ சூனியம் செய்வதோ இறை நிராகரிப்பாகும்………..இது போன்ற அனைத்து நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் ஏகத்துவத்திற்கு எதிரானதாகும் என நம்புகிறேன்.

12இஸ்லாத்தின் மேற்சொல்லப்பட்ட அடிப்படைகளோடு மோதும் அத்வைதம்,ஷீயா,முஃதஸிலா,கவாரிஜ்,காதியானிகள்,அஹ்லுல் குர்ஆன்,தரீக்காக்கள் என உள்ள அனைத்துப் பிரிவுகளும் வழிகெட்ட கொள்கைகளே என நம்புகிறேன்.

13-இஸ்லாத்தின் மூலாதாரங்கள் அல்குர்னும் ஸஹீஹான ஹதீஸ{ம் மாத்திரமே.அல்குர்ஆன் எப்படி வஹியோ அதுபோல ஸஹீஹான ஹதீஸ்கள் அனைத்தும் வஹியாகும்.

14-இந்த இரண்டு மூலாதாரங்களிலும் ஒருவிடயம் தெளிவாகச் சொல்லப்பட்ட பின்னர் அதற்கு மாறாக நபித்தோழர்கள் சொல்கிறார்களே, மத்ஹப் இமாம்கள் சொல்கிறார்களே, அறிஞர்கள் சொல்கிறார்களே என அதனை விடுவது வழிகேடாகும்.

இவைகளை நான் கொள்கையாக ஏற்றிருப்பது மாத்திரமல்ல இவைகளைத்தான் பிரச்சாரம் செய்தும் வருகிறேன்.இதில் முரண்படும் எவரும் இஸ்லாத்தின் கொள்கையை விட்டே வெளியேறிவிடுவர்.இந்தக் கொள்கையிலேதான் ஒவ்வொரு முஸ்லிமும் இருக்கவேண்டும் இதனைப் கொள்கையாக ஏற்பவர்ளையே முஸ்லிம் சமூகம் வஹ்ஹாபிகள், தவ்ஹீத் வாதிகள் ,குழப்பவாதிகள் என அறியாமையால் விமர்சிக்கின்றனர்;.இவைகளைக் கொள்கையாய்  ஏற்றவர்கள் தவ்ஹீத் வாதிகளே ,  இவைகளைக் கொள்கையாய் ஏற்ற இயக்கங்களே தவ்ஹீத் இயக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இவைகளில் ஒன்றில் முரண்பட்டாலும் அவர் சரியான கொள்கையில் உள்ளவரல்ல. தவ்ஹீத் வாதியல்ல. இவைகளைக்கு மாற்றமாக நான் எங்கு பேசியுள்ளேன்? அப்படி எந்தவித ஆதாரமுமின்றி அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படுவதாக (அதாவது வழிகேடர்)என எழுதுவது மிகப்பெரிய பாவமாகும்.

صحيح البخاري –  5752 – عن أبي هريرة رضي الله عنه  : أن رسول الله صلى الله عليه و سلم قال  إذا قال الرجل لأخيه يا كافر فقد باء به أحدهما 

“ஒரு மனிதர் தன் சகோதரனைப் பார்த்து “”காபிரே” என்றால் இருவரில் ஒருவர் அதனை சுமந்து கொள்வார்” என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி:-5752)
ஆக மூடலாக இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண் என்று எவ்வாறு சொல்வார்கள்.முடிந்தால் ஆதாரங்களை முன்வைக்கட்டும்.இது போன்ற எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு TNTJ யிற்கு உகந்ததல்ல.

சூனியம் பற்றிய மௌலவி பீ.ஜே அவர்களின் நிலைப்பாடு

சூனியம் செய்வதும் சூனியம் அவிழ்ப்பதும் சூனியம் கற்பதும் கற்பிப்பதும் இறை நிராகரிப்பாகும் என்பது குர்ஆனும் ஹதீஸ{ம் தெளிவாக எமக்குச் சொல்கிறது. இதில் முரண்படுபவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. இதில் எனக்கோ மௌலவி பீ.ஜே அவர்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது.ஆனாலும் சூனியம் என்பது வெறும் வித்தைதான். அதனால் எந்தப் பாதிப்பும் செய்யமுடியாது என்ற தனிப்பட்ட கருத்தை மௌலவி பீ.ஜே அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.இந்த விடயத்தில் அவர்களுடைய முடிவு தவறானது.அவ்வாறு சொன்னால் ஏராளமான அல்குர்ஆன் வசனங்களுக்கு வலிந்துரை செய்ய வேண்டி ஏற்படும்.சில ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டி ஏற்படும்.அது இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.சூனியம் பற்றிய மௌலவி பீ.ஜே யின் நிலைப்பாடு தவறானது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருந்தாலும் பின்வரும் செய்தியே ஹதீஸ்கள் மார்க்க ஆதாரமாகும் என நம்புபவர்களுக்குப் போதுமானதாகும்.விரிவான விளக்கங்களைக் காண விரும்புவோர் அது சம்பந்தமாக சூனியம், ஜின், கண்ணேறு என்ற தலைப்பில் நான் பேசிய 9சிடிக்களைக் கொண்ட தொடர் உரையை பார்வையிடவும்.

صحيح البخاري –  5130 – أخبرنا عامر بن سعد عن أبيه قال  : قال رسول الله صلى الله عليه و سلم  من تصبح كل يوم سبع تمرات عجوة لم يضره في ذلك اليوم سم ولا سحر 

“ஒவ்வொரு நாள் காலையிலும் யார் 7 அஜ்வா வகை ஈத்தம்பழங்கள் சாப்பிடுகிறாரோ அன்றைய தினம் அவரை விஷமோ சூனியமோ பாதிக்காது” என்று நபியவர்கள் கூறினார்கள்.(புகாரி:5130)

விஷத்தைப் போன்று சூனியமும் பாதிக்கக் கூடியது என்பதனாலேயே நபியவர்கள் இதனைச் சொல்கிறார்கள் மாத்திரமல்ல விஷத்தின் பாதிப்பையும் சூனியத்தின் பாதிப்பையும் எதிர்த்து நிற்கும்; சக்தி அஜ்வா என்ற ஈத்தம் பழத்தில் இருப்பதையும் நபியவர்கள் சொல்வது சூனியம் விஷத்தைப் போன்று தாக்கம் செலுத்த வல்லது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.

நான் மேற்சொன்ன இஸ்லாத்தின் அடிப்படைகளை ஏற்ற அல் குர்ஆன் ஸ{ன்னா வழிவந்த அனைத்து அறிஞர்களும் சூனியம் உண்டு அதற்கொரு தாக்கம் உண்டு என்பதை ஏற்றவர்களே.

1-         இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுவதை அவதானியுங்கள்

فتح القدير للشوكاني – 1 151

وقد أجمع أهل العلم على أن له تأثيراً في نفسه ، وحقيقة ثابتة ، ولم يخالف في ذلك إلا المعتزلة ، وأبو حنيفة كما تقدم

“”அபூஹனீபா, முஃதஸிலா கொள்கைப் பிரிவினர் தவிர மற்றைய மார்க்க அறிஞர்கள் அனைவரும் சூனியத்திற்கு ஒருயதார்த்தமும் தாக்கமும் உண்டு என்பதை ஏகோபித்து ஏற்றுள்ளனர்”       (பத்ஹ{ல் கதீர்.1-151)2-இமாம் குர்துபீ சொல்வதை அவதானியுங்கள்

تفسير القرطبي -2  46

ذهب أهل السنة إلى أن السحر ثابت وله حقيقة.وذهب عامة المعتزلة وأبو إسحاق الاسترابادي من أصحاب الشافعي إلى أن السحر لا حقيقة له

“”ஸ{ன்னாவைப் பின்பற்றும் அறிஞர்கள்; சூனியத்திற்கு ஒருயதார்த்தமும் தாக்கமும் உண்டு என ஏற்றுள்ளனர். முஃதஸிலா கொள்கைப் பிரிவினரும் ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இஸ்த்ராபாதீ என்பவரும் இதனை மறுக்கின்றனர்”       (குர்துபீ.2-46)

இது போன்று ஸ{ன்னா வழிவந்த அறிஞர்களான இமாம் மாலிக்;, ஷாபிஈ, அஹ்மத், புகாரி, இப்னு தைமியா, இப்னுல் கையிம், தஹபீ, இப்னு கஸீர், ……மற்றும் நவீன காலத்தில் வாழ்ந்து மரணித்த அறிஞர்களான இப்னு பாஸ், அல்பானி, உஸைமின்………என அனைத்து அறிஞர்களும் சூனியத்திற்கு ஒருயதார்த்தமும் தாக்கமும் உண்டு என்பதை ஏற்றுள்ளனர்.

இவர்களையெல்லாம் குறிப்பிட்டதன் காரணம்:

இவ்வளவு அறிஞர்கள் சொல்வதை நிராகரிப்பதா?!!!!!!!
இமாம்கள் தவறு செய்வார்களா?!!!!!!!!!!!!!!!!!!!!
அவர்களுக்குத் தெரியாததா இவர்களுக்குத் தெரியவந்தது?!!!!!!!!!!!!!!!!!

என்ற பிரமைகளுக்காக அல்ல. இவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்பதற்காகவும் அல்ல. எனது பிரச்சாரங்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளோடு மோதுகிறது என்பதற்கு எனது சூனியம் பற்றிய நிலைப்பாடுதான் காரணமாயின் இவர்களும் இஸ்லாத்தின் அடிப்படைகளோடு மோதும் வழிகேடர்களா?என்ற வினாவிற்காகத்தான்.

இதுவெல்லாம் எமது உள்ளங்களில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.இஸ்லாத்தின் அடிப்படை என்று பீ.ஜே கருதுவது தனது சொந்த முடிவுகளைத்தானா? இவ்வளவு அறிஞர்களது நிலைப்பாட்டில் நானிருக்க என்னை மட்டும் இஸ்லாத்தின் அடிப்படைகளோடு மோதுபவர் என்று சொல்லக்காரணமென்ன?மௌலவி பீ.ஜேயின் மார்க்க ஆய்வுகளை யாரும் விவாதிக்க வரவில்லையென்றால் அல்லது மாற்றுக் கருத்துச் சொன்னால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை விட்டும் வெளியேறிவிடுவார?

ஏகத்துவக் கொள்கை எவரினதும் எந்த இயக்கத்தினதும் எந்த தனி நபரினதும் ஏகபோக உரிமை கிடையாது என்பதை அறிந்து கொண்டே இப்போக்கில் செயல்படுவது தக்லீதிற்கான ஏற்பாடல்லவா?

ஸஹீஹான ஹதீஸ்கள் பற்றிய மௌலவி பீ.ஜே அவர்களின் நிலைப்பாடு.

அல்குர்ஆனைப் போன்று ஸஹீஹான ஹதீஸ்களும் மார்க்க ஆதாரமே என்பதில் எந்த ஒரு ஏகத்துவச் சகோதரனுக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அல்குர்ஆனைப் போன்று ஹதீஸ்களும் வஹீதான். ஒரு ஹதீஸ் நபியவர்களைத் தொட்டும் வந்த செய்திதான் என்பதை உறுதிப்படுத்த பின்வரும் 5 நிபந்தனைகள் தேவை. இந்த 5 நிபந்தனைகள்; மாத்திரம்தான் ஹதீஸ்கலை அறிஞர்களால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.

1-அறிவிப்பாளரது நம்பகத்தன்மை.
2-
அறிவிப்பாளரது கல்வித்தரம்.
3-
ஒவ்வொரு மாணவரும் செய்தியை ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருத்தல்.
4-
குறிப்பிட்ட செய்தியை அறிவிக்கும் ஏனைய மாணவர்களின் அறிவிப்பிற்கு மோதும் வகையில் முரண்படாமல் இருத்தல்.
5-
மறைமுகமான அறிவிப்பாளர் பலஹீனங்கள் இல்லாதிருத்தல்.
ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை தொகுக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை எழுதப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்கலை நூல்களிலும் இந்த நிபந்தனைகளையே காணலாம்.

المحدث الفاصل بين الراوي والواعي-1

2-معرفة علوم الحديث
3-المستخرج على معرفة علوم الحديث
4-الكفاية في علم الرواية
5-الإلماع إلى معرفة أصول الرواية وتقييد السماع
6-علوم الحديث
7-التقريب والتيسير لمعرفة سنن البشير النذير
8-تدريب الراوي في شرح تقريب النواوي
9-المنهل الروي
10نظم الدرر في علم الأثر
11-فتح المغيث في شرح ألفية الحديث
12-نخبة الفكر في مصطلح أهل الأثر
13-المنظومة البيقونية
14-الباعث الحثيث
15-قواعد التحديث

மேற் சொல்லப்பட்டவைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுதப்பட்ட ஹதீஸ்கலை நூல்கள். இவைகள் எதிலும் ஒரு ஹதீஸை உறுதிப்படுத்த மேற் சொல்லப்பட்ட 5 நிபந்தனைகளையும் தவிர வேறு எந்த நிபந்தனையும் குறிப்பிடப்படவில்லை. ஒரு செய்தியை ஏற்றுக்கொள்ள இவைகளே அடிப்படையான நிபந்தனைகள். இந்த அடிப்படையிலேதான் ஒவ்வொரு ஹதீஸ்களையும் நாம் ஆய்வு செய்து வரலாறு நெடுகிலும் ஏற்று வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் தான் மௌலவி பீ.ஜே அவர்களும் 1980களில் ஆரம்பித்த அவரது பிரச்சாரத்தின் நெடுகிலும் செயல்பட்டார். 2000 இற்கு பிற்பட்ட பகுதியிலேயே இந்த நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. இன்று ஒரு ஹதீஸை ஏற்க 6வது ஒரு நிபந்தனையை அதிகரித்து -ஹதீஸின் கருத்து அல்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இல்லாதிருத்தல் – என்ற புதிய நிபந்தனையை சேர்த்து சில அறிஞர்களின் ஹதீஸ்கலை அல்லாத சில நூல்களில் காணப்படும் கருத்துக்களை எடுகோளாகக் காட்டி வலுசேர்த்து வருவதை அவதானிக்கிறோம். அந்த அறிஞர்கள் பட்டியலில்  இமாம் ஷாபிஈ அவர்களையும் இடம்பெறச் செய்ததுதான் மிக வேதனை தருவதாகும்.ஆக, ஒரு ஹதீஸ் புகாரியில் மேற்சொல்லப்பட்ட ஐந்து நிபந்தனைக்குட்பட பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அந்த ஹதீஸை 6000 சொச்சம் அல்குர்ஆனிய வசனங்களோடும் ஒப்பிட்டு முரண்படவில்லையென்றால் தான் அது ஸஹீஹான ஹதீஸ் என நம்ப முடியும். எனவே ஸஹீஹ{ல் புகாரியை வைத்திருப்பவர்களும் ஸஹீஹ் முஸ்லிமை வைத்திருப்பவர்களும் அவைகளிலுள்ள ஹதீஸ்களில் 95 சதவீதமான ஹதீஸ்கள் ஸஹீஹானவை என சந்தோசப்பட முடியாது. -புகாரியும் முஸ்லிமும் அறிவிப்பாளர் வரிசையைத்தான் ஆய்வு செய்வார்கள் அது சரியாயின் பதிவு செய்துவிடுவார்கள் குர்ஆனோடு மோதுகிறதா இல்லையா என்று பார்க்க மாட்டார்கள் நாம்தான் அதனை ஆய்வு செய்ய வேண்டும்.- என அவரே பல இடங்களில் சொல்வதை அவதானிக்கலாம்.மௌலவி“பீ.ஜேயின் இந்த தனிப்பட்ட நிலைப்பாடு இமாம் புகாரியையும் முஸ்லிமையும் அவர்களின் -நபியவர்கள் பற்றிய நம்பகமான ஆதாரப்பூர்வமான செய்திகளை மாத்தரம் பதிவு செய்வோம்- என்ற நிலைப்பாட்டையும் பெறுமதியிழக்கச் செய்வதைப் பார்க்கிறோம்.-ஹதீஸின் கருத்து அல்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இல்லாதிருத்தல் – என்ற நிபந்தனை சரியான நிபந்தனையாயின் அல்குர்ஆனை மனனமிட்டிருந்த, தங்களது இரண்டு நூல்களிலும் தப்ஸீர் என்ற பாடத்தையிட்டு அதன் கீழ் அல்குர்ஆனிற்கு விரிவுரை வழங்கும் ஹதீஸ்களை சேர்த்துக் கொண்ட இந்த இரண்டு அறிஞர்களும் -விளக்கம் அளிக்க முடியாத வகையில் அல்குர்ஆனோடு மோதுகின்ற- எந்தச் செய்தியையும் தங்களது நூல்களில் சேர்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக இமாம் புகாரி தனது நூலான ஸஹீஹ{ல் புகாரியில் பதிவு செய்யும் ஹதீஸ்களுக்கு எல்லா அறிஞர்களை விடவும் கூடுதலான நிபந்தனையிட்டவர். இந்த நிபந்தனையை வேறு எந்த நூல்களிற்கும் அவரிடவில்லை.
இமாம் ஷாபிஈ சொல்வதை அவதானியுங்கள்

“الأم للشافعي -7  304

وقال الله عزوجل (والسارق والسارقة فاقطعوا أيديهما) وقال عز ذكره (الزانية والزانى فاجلدوا كل واحد منهما مائة جلدة) فلو صرنا إلى ظاهر القرآن قطعنا من لزمه اسم سرقة وضربنا كل من لزمه اسم زنا مائة جلدة ولما قطع النبي في ربع دينار ولو يقطع في أقل منه ورجم الحرين الثيبين ولم يجلدهما استدللنا على أن الله عزوجل إنما أراد بالقطع والجلد بعض السراق دون بعض وبعض الزناة دون بعض ومثل هذا لا يخالفه المسح على الخفين قال الله عزوجل (إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برءوسكم وأرجلكم إلى الكعبين) فلما مسح النبي صلى الله عليه وسلم على الخفين استدللنا على أن فرض الله عزوجل غسل القدمين إنما هو على بعض المتوضئين دون بعض وأن المسح لمن أدخل رجليه في الخفين بكمال الطهارة استدلالا بسنة رسول الله صلى الله عليه وسلم لانه لا يمسح والفرض عليه غسل القدم كما لا يدرأ القطع عن بعض السراق وجلد المائة عن بعض الزناة والفرض عليه أن يجلد ويقطع فإن ذهب ذاهب إلى أنه قد يروى عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أنه قال سبق الكتاب المسح على الخفين فالمائدة نزلت قبل المسح المثبت بالحجاز في غزاة تبوك والمائدة قبله فإن زعم أنه كان فرض وضوء قبل الوضوء الذى مسح فيه رسول الله صلى الله عليه وسلم وفرض وضوء بعده فنسخ المسح فليأتنا بفرض وضوأين في القرآن فإن لا نعلم فرض الوضوء إلا واحدا وإن زعم أنه مسح قبل يفرض عليه الوضوء فقد زعم أن الصلاة بلا وضوء ولا نعلمها كانت قط إلا بوضوء فأى كتاب سبق المسح على الخفين المسح كما وصفنا من الاستدلال بسنة رسول الله صلى الله عليه وسلم كما كان جميع ما سن رسول الله صلى الله عليه وسلم من فرائض الله تبارك وتعالى مثل ما وصفنا من السارق والزانى وغيرهما (قال الشافعي) ولا تكون سنة أبدا تخالف القرآن، والله تعالى الموفق.

“-திருடர்களுடைய கையை அல்குர்ஆன் வெட்டச் சொல்கிறது. இது எல்லாத் திருட்டையும் குறிக்கிறது. இதனடிப்படையில் செயல்படுவோமாயின் அனைத்துத் திருடர்களுடைய கையையும் வெட்ட வேண்டும். ஆனால் நபியவர்கள் கால் தீனாரிற்குக் குறைவான பெறுமதியுள்ளதைத் திருடியவரின் கையை வெட்டக் கூடாது என்று சொன்னார்கள். எனவே அல்லாஹ் சில திருடர்களை இதன் மூலம் நாடவில்லை எனக் கூறுகிறோம்.

விபச்சாரம் செய்தவர்களுக்கு கசையடி அடியுங்கள் என்று குர்ஆன் சொல்கிறது. இது விபச்சாரம் செய்த அனைவரையும் குறிக்கிறது. ஆனால் திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தபோது நபியவர்கள் கசையடி அடிக்கவில்லை. கல்லெறிந்து கொண்றார்கள். இதன் மூலம் அல்லாஹ் விபச்சாரம் செய்யும் எல்லோரையும் நாடவில்லை எனக் கூறுகிறோம்.

வுழூவின்போது கால்களைக் கழுவுமாறு அல்லாஹ் சொல்கிறான். ஆனால் காலணியின் மீது நபியவர்கள் சில பொழுதுகளில் மஸ்ஹ் செய்தார்கள்.எனவே  இதன் மூலம் வுழூச் செய்யும் எல்லோரையும் அல்லாஹ் நாடவில்லை எனக் கூறுகிறோம்……………………ஒரு காலமும் குர்ஆனுக்கு முரண்படும் ஒரு ஸ{ன்னா இருக்கவே முடியாது.”

இவ்வளவு தெளிவாக ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாது என்று சொன்ன ஒரு அறிஞரை முரண்படும் என்று சொல்பவர் என்று சொல்கிறார்களே நிரூபிப்பார்களா!!!!!

இஸ்லாமிய கொள்கைச் சமூகம் வரலாறு முழுதும் கொண்டுள்ள இந்த நிலைப்பாடு எவ்வளவு தெளிவானது பகுத்தறிவுபூர்வமானது என்பதை விரிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றிய டீஎன்டீஜே யினரினதும் மௌலவி பீ.ஜேயினதும் தனிப்பட்ட நிலைப்பாடு எவ்வளவு விபரீதமானது அவர்களது விமர்சனங்கள் எவ்வளவு பலஹீனமானவைகள் என்பதைக்காணவும் 1-அறிவு என்றால் என்ன? 2-நபிகளாரைப் பின்பற்றுவதன் இன்றைய கால வடிவம் என்ன என்ற தலைப்புக்களில் நாம் பேசிய இரு சிடிக்களையும் பார்வையிடவும்.

எது எப்படியாயினும் அனைத்து அறிஞர்களுக்கும் முரண்படும் இந்த நிலைப்பாடிற்கு நான் முரண்பட்டதும் அந்த அறிஞர்களோடு உடன்பட்டதும்தான் நான் கொள்கையில் வழிகெட்டவன் என்ற சொல்லக் காரணம் என்றால் அவர்களும் வழிகெட்டவர்களா?

2000 இற்கு முன்னர் மௌலவி பீ.ஜே யும் டிஎன்டிஜேயும் வழிகெட்டவர்களா?

-……………..ஸஹீஹான ஹதீஸ்கள் ஒருகாலமும் அல்குர்ஆனோடு முரண்படாது- என்ற நிலைப்பாட்டில் இலங்கையில் நாம் இருக்கிறோம். ஆனால் இதனை எடுத்து வைக்கும்போது என்ன மௌலவி பீ.ஜேயிற்கு மாற்றமாகப் பேசுகிறீர்களே!! என எதிர் வினாத் தொடுக்கின்றனர். நாங்கள் தெளிவாகத்தான் விளங்கப்படுத்துகிறோம். ஆனால் தக்லீதின் காரணமாக அது அவர்களுக்குப் புரிவதில்லை. நாம் கொள்கையை விட்டே வெளியே போய்விட்டது போன்று பார்க்கிறார்கள். இது தக்லீதுதான். இவர்களுக்கு நீங்கள் ஒரு உபதேசம் செய்யவேண்டும்.- என நான் மௌலவி பீ.ஜே அவர்களோடு நடத்திய கலந்துரையாடலின்போது நேரடியாகவே வினவினேன். அதையேற்று –அவ்வாறு நடப்பது தவறு. என்ன செய்ய!! எவ்வளவு சொன்னாலும் வரலாறு முழுதும் அப்படி தக்லீத் செய்யும் கூட்டம் இருந்து கொண்டே வருகிறது. இதனை நீங்கள்தான் இலங்கையில் தர்பியா வகுப்புகள் வைத்து மாற்ற வேண்டும்……………” என்று உபதேசித்தார். (உண்மையில் பணிவான முறையில் தாழ்மையோடு பதிலளித்தார்) ஏன் அது வழிகேடு என்று அப்பொழுது சொல்லவில்லை. இது நீங்கள் ஏதோ அழுத்தங்களுக்காகவே இந்த முடிவுகளை எடுத்துள்ளீர்கள் என்ற யூகத்தை எம்மில் ஏற்படுத்துகிறது.

மௌலவி பீ.ஜேயின் ஆய்வின் முடிவுகள் டீஎன்டீஜே யின் முடிவுகளாவது மறுக்கமுடியாத உண்மை.டீஎன்டீஜேயில்  உள்ள ஒரு மௌலவி ஒரு ஆய்வின் முடிவை வெளியிட விரும்பினால் கூடி ஆலோசனை நடத்திப் பின்னர் மௌலவி பீ.ஜே யின் வாதங்களுக்கு பதிலளித்த பின்தான் வெளியிட முடியும். ஆனால் பீ.ஜே தனது ரமழான் காலங்களில் பேசுகின்ற ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும் இப்படியா வெளியாகின்றன? என்பது ஐயமானதே.

மௌலவி பீ.ஜேயின் முடிவுகள் டீஎன்டீஜேயின் முடிவாகட்டும் அது எமக்குப் பாதிப்புக்கிடையாது. இஸ்லாத்தின் முடிவாக அறிவிக்காதீர்கள்.

மறுபடியும் சொல்கிறேன் ஏகத்துவக் கொள்கை எவரினதும் எந்த இயக்கத்தினதும் எந்த தனி நபரினதும் ஏகபோக உரிமை கிடையாது என்பதை அறிந்து கொண்டே இப்போக்கில் செயல்படுவது தக்லீதிற்கான ஏற்பாடல்லவா?

என்னைப்பற்றி மௌலவி பீ.ஜே அவர்கள் செய்துள்ள தனிப்பட்ட விமர்சனங்கள்

தாராளமாக ஏராளமாக மோசமாக கேட்டதையெல்லாம் மௌலவி பீ.ஜே அவர்கள் என்னைப்பற்றி பேசியுள்ளார்.

-இவர் ஒரு ஷைத்தான் இவரை சந்திக்க எனக்கு விருப்பமில்லை

-உலக பித்னாவில் இவர் முதலானவர்

-அந்த மாதிரி நடிப்பார்

-இந்தியாவிற்கு வந்து பித்னா பண்னும் வேலையைத்தான் பார்த்தார்.

-இவருக்கு க்ரவ்ட் வருதுன்னு சொல்லி அவரை எஸ்எல்டிஜேயில் வைத்திருக்கிறீர்கள். சம்மாங்கோட் பள்ளியிலும்தான் க்ரவ்ட் வருகிறது. அப்போ அவங்க சொல்றது உண்மையாகிறுமா!!

-என்னைப் பற்றி நிறைய அவதூறு சொல்லியுள்ளார்.

-என்னைய மனசுல டாக்கட்டாக வைத்துக் கொண்டு செயல்படுகிறார்.
………………………………………………………………………………………………………………………………………………………………

என ஏராளமாக மௌலவி பீ.ஜே அவர்கள் என்னைப் பற்றி சொன்ன விமர்சனங்களை ஓடியோவி;ல் கேட்டபோது மிகவும் வேதனைப்பட்டேன். இந்த அவதூறுகள் வாய்வழியாக இதற்கு முன்னரே எனக்குக் கிடைத்திருந்தன. உடனடியாக மௌலவி பீ.ஜே யுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளப் பல முயற்;சி செய்தேன். தோல்வியைக் கண்டேன். இந்தியாவிற்குப் போய் சந்திப்பதென முடிவு செய்து கொண்டு இந்தியா புறப்பட்டுச் சென்றேன். மௌலவி பீ.ஜே அவர்கள் அலுவலகத்தில் இருக்கின்ற செய்தியை பலர் மறைத்தனர். விடா முயற்சியல் அவர் இருப்பதை அறிந்து 100 இற்கு மேற்பட்ட முறை பல தொலைபேசிக@டாக தொடர்புகொள்ள முயற்சித்தேன். பதில் கிடைக்கவில்லை. பின்னர் அவர் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள அறையில் இருப்பதை அறிந்து அந்த அறைக்குப் பக்கத்திலேயே அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தேன். தொலைபேசியுடாக முயற்சித்துக் கொண்டே இருந்தேன். மணி அடிக்கும் சப்தம் எனக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது.

பின்னர் ஜும்ஆவிற்கு வருவார்தானே அப்பொழுது சந்திப்போம் என  எதிர்பார்த்திருந்தேன். ஏனெனில் அன்று அவருடைய குத்பா. ஆனால் அவர் குத்பா பிரசங்கம் செய்ய வரவில்லை. பாக்காரிடம் முறையிட்டேன். ஒங்க பெயரக் கேட்டாவே கதைய விடுங்க என்று சொல்றாரு. நான் முடியுமான வர முயற்சி செய்துவிட்டேன் என்றார். அதே நேரம் அன்றைய தினம் இலங்கையிலிருந்து வந்த இரு மௌலவிமார்களை 1மணித்தியாலத்திற்கு மேற்பட்ட நேரம் பேசினார். இனி சந்தர்ப்பங் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு என்னைப் பற்றிய செய்தியை என்னிடத்தில் முதலில் விசாரிக்க வேண்டும் என்பதைத் தெரிந்த இவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்ற மனவேதனையோடு கடையநல்லூர் சென்று அங்குள்ள எனது உலமா நண்பர்களிடம் உண்மை நிலவரங்களை சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

அவர் நான் வந்த செய்தியையும் வேண்டுமென்றுதான் எவொய்ட் பண்ணினார் என்ற செய்தியையும்  -இவர் ஒரு ஷைத்தான் இவரை சந்திக்க எனக்கு விருப்பமில்லை- என தான் சொன்னேன் என்ற செய்தியையும் வஸ்னியின் சந்திப்பின்போது பதிவுசெய்யப்பட்ட ஓடியோவில் கேட்டபோது மாணவன் என்ற நிலையில் இருக்கும் எனக்கு வேதனையாக இருந்தது. இதற்கான பதில்களை அவர் முன்னிலையில் வைக்கும் வரை நான் இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை.

மார்க்கத்தைப் படிக்க இணையத்தை நாடிவருபவர்கள் இதுபோன்ற செய்திகளையும் சேர்த்துப் படிக்க வேண்டியிருப்பது கவலைக்குறியதே. முக்கியத்துவம் கருதியே இவைகளை எழுதினோம். அல்லாஹ் மௌலவி பீ.ஜே அவர்கள் மூலம் தவ்ஹீத் பிரச்சார வளர்ச்சியை இது போன்ற நிலைகளையெல்லாம் சரிசெய்து இறுதிவரைக்கும் தர வேண்டும் என்றும் அவரது தவறுகள் அவரது கண்ணீர் நிறம்பிய பிரச்சார வரலாற்றை எமது மனதிலிருந்து மறைத்துவிடாமலிருக்க வேண்டும் என்றும் எம்மனைவரது பாவங்களையும் மன்னித்து மனம் ஒன்றித்து ஏகத்துவப் பாதையில் பயணிக்க எல்லாம் அறிந்த இறைவனைப் பிரார்த்தித்து முடித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts