Saturday, April 20, 2024

அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாவின் பார்வையில் ஸஹாபாக்கள்

நபியவர்கள் இந்த இஸ்லாம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை என்று ஏற்றார்களோ அன்று முதல் அவரது மரணம் வரை அவருடன் துணை நின்று அவரது மரணத்தின் பின்னால் அந்த இஸ்லாத்தை உரிய முறையில் பின்வரும் தலை முறைக்கு எத்திவைத்து இறைதிருப்தியைப்பெற்றுக் கொண்ட ஒரு சமுதாயமே நபித்தோழர்கள்.அவர்கள் பற்றி அறிந்து கொள்வது,அவர்களை இஸ்லாம்சொல்லும் வடிவில் நம்புவது அகீதாவின் ஒரு பகுதியாகும்.ஆனாலும் எம்மில் அதிகமானோர் இவ்விடயத்தில் போதிய தெளிவில்லாமலிருப்பதை காணமுடிகிறது.ஒரு சாரார்; நபித்தோழர்களை ஒரு சாதாரண பார்வையுடன் நோக்கி அவர்களது சிறப்புத் தன்மையை நாவளவில் ஏற்று மனதளவில் அலட்சியம் செய்யும் அதே சமயம் இன்னொரு குழுவினர் அவர்களை உரிய இடத்திலிருந்து உயர்த்தி அவர்களில் ஒவ்வொருவரது சொல்லையும் செயலையும் பின்னபற்றத் தலைப்பட்டுள்ளனர். இச்சிக்கலான சூழ்நிலையில் ஒருமுஸ்லிமின் நிலைப்பாடு எவ்வாறிருக்க வேண்டும் என்பதை அல்-குர்ஆன்,அஸ்-ஸுன்னாவின் ஒளியில் விளக்குவதே  நோக்கமாகும்.

ஸஹாபி என்றால் யார்?

‘நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்று அதே நிலையில் மரணித்தவரே ஸஹாபி என அழைக்கப்படுவார்.’
(பார்க்க:-நுஃபதுல் பிக்ர்:1-230,    முஃஜமு முஸ்தலஹாதில் ஹதீஸ்:ப-205)

அவர்களது எண்ணிக்கை என்ன?

ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தகுதியை பெற்றுள்ளனர்.ஆனாலும் ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து அறிவித்தவர்கள் 1600 இற்கும் குறைந்தவர்களே.

(பார்க்க:-அத்-தக்யீத் வல் இய்லாஹ்:264,  முஃஜமு முஸ்தலஹாதில் ஹதீஸ்:205-211)

அவர்களது படித்தரங்கள்:

ஸஹாபாக்களை அல்-குர்ஆன் 3 தரங்களாக வகுக்கிறது. 1-முஹாஜிரூன் 2-அன்ஸார் 4-மக்கா வெற்றியின் பின்னர் இஸ்லாத்தை ஏற்றவர்கள்.

நபித்தோழர்களை ஏசுதல்

பெரும்பாவங்கள் என்ற பட்டியலில் குறிப்பிடத்தக்களவிலான சில  அம்சங்களை இஸ்லாம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தொடரில் நபித்தோழர்ளை திட்டுதல் அல்லது ஏசுதல் என்ற அம்சமும் உள்ளடங்கியுள்ளது. நபித் தோழர்களை ஏன் ஏசக் கூடாது என்பது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களுக்கு ஒரு சச்சரவின் போது நபித் தோழர் காலித் பின் வலீத் ஏசிவிட்டார் அந்த சமயத்தில் நபியவர்கள் பின்வருமாறு  கூறுகிறார்கள்.

صحيح البخاري 3673 – عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ تَابَعَهُ جَرِيرٌ وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنْ الْأَعْمَشِ

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) ஆதாரம் : புஹாரி 3673

நபித்தோழர்களிடம் பிழையிருந்தாலும் சரியிருந்தாலும் அவர்களை ஏசுவதற்கு யாருக்குமே உரிமைகிடையது.உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்று நபியவர்கள் கூறியிருப்பது நபித்தோழர்களின் உளத்தூய்மையையும், இஸ்லாத்துக்காக எவ்வளவும் செலவு செய்வோம் என்ற அவர்களின் தராளத்தன்மையையும், தியாகத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

உண்மையில் நபித் தோழர்கள் செய்த வணக்க வழிபாடுகளையும், நாம் செய்கின்ற வணக்க வழிபாடுகளையும் ஒப்பிடும் போது கால அடிப்படையில் நாம் அதிகமாக வணக்கம் செய்வதாகத் தெரிந்தாலும் உளத்தூய்மையில் நபித்தோழர்களுக்கும் நமக்கும் பாரிய வித்தியாசங்களுள்ளன. எனவே அதிகமாக வணக்கம் செய்வது பெருமையான அம்சமல்ல. ஒரேயொரு வணக்கம் செய்தாலும் முழுமையான உளத்தூய்மையோடு அதைச் செய்வதுதான் அவசியமானதாகின்றது. ஹுதைபியா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபித்தோழர்  காலித் பின் வலீதுக்கே அபர்துர்ரஹ்மான் போன்ற ஒரு நபித்தோழரை ஏசுவதற்கு அனுமதியில்லையென்றால் நம்மைப் போன்றவர்களுக்கு எவ்வகையிலுமே நபித்தோழர்களை ஏசுவதற்கு அனுமதியில்லை.

இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் நபித்தோழர்களை நேசித்தல் என்பது பிரத்யேகமானதோர் அத்தியாயமாகும். ‘நபித்தோழர்களை  நேசிக்க வேண்டும் எவ்வகையிலும் அவர்கள் மீது குறைகாணவோ, பழி சுமத்தவோ முயற்சித்தலாகாது’ என்ற பலமானதும், உறுதியனதுமான நம்பிக்கையோடுதான் நபித்தோழர்கள் பற்றிய சகல அம்சங்களும் நோக்கப்பட வேண்டும். நபித்தோழர்கள் பற்றிய செய்திகள் இந்த அடிப்படை நம்பிக்கையில்லாமல் ஆராயப்படுமானால் அவர்களின் நடவடிக்கைகளில் தவறான புரிதல்கள் ஏற்பட்டு, இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியுள்ள நற்பெயரில் கலங்கம் ஏற்படுத்தும் சிக்கலான முடிவுகளைக் காண நேரிடலாம்.

திறந்த ஆய்வு முறையும் நபித்தோழர்களைக் குறை காணுதலில் அதன் செல்வாக்கும்

பல்கலைக்கழகங்களில் البحث الموضوعي’திறந்த ஆய்வு முறை’ என்றொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு விடயத்தை ஆய்வு செய்யும் போது அவ்விடயம் பற்றிய சார்பான அபிப்பிராயமோ, தப்பபிப்பிராயமோ ஆய்வாளனின் சிந்தனையில் இருக்கக்கூடாது. எந்தப் பின்னணியையும் கொண்டிராது திறந்த மனதுடன் ஒரு பொதுவான புள்ளியிலிருந்துதான் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் ஆய்வின் முடிவு நடுநிலையானதாகவிருக்கும் என திறந்த ஆய்வு முறைக்கு விளக்கம் கூறலாம். உதாரணமாக அலீ (ரழி), முஆவியா (ரழி) இருவருக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தினை இவ்வாய்முறையின் அடிப்படையில் ஆராய்ந்தால் ஆட்சிக்காகவே அவர்களுக்கிடையில் போர் வெடித்தது என்ற முடிவையே காண முடியும். அதே நேரம் இஸ்லாமிய அடிப்படையில் அதை நோக்கினால் உத்மான் (ரழி) அவர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முஆவியா (ரழி) அர்களின் கோரிக்கையாகவிருந்தது. ஆனாலும் நியாயமான சில காரணங்களால் அலீ (ரழி) அவர்களால் அக்கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது போனது என்ற முடிவையே பெறலாம். அதே போல  உத்மான் (ரழி) அவர்களின் ஆட்சி தொடர்பில் இவ்வாய்முறையின் அடிப்படையில் ஆராய்ந்தால் தனது குடும்பத்தவர்களுக்கு தனது ஆட்சியில் பதவிகளை, பொறுப்புக்களை வழங்கியதன் மூலம் குடும்பத்தவர்களைக் கூடுதலாகக் கவனித்து விட்டார் என்ற முடிவைக் காணலாம். இஸ்லாமிய ஆட்சி தொடர்பாக எழுதப்பட்டுள்ள மௌலான மௌதூதி போன்றோரின் புத்தகங்களைப் பார்க்கும் போது உத்மான் (ரழி) அவர்களின் ஆட்சியைக் குறை கூறுபவைகளாக அல்லது விமர்சிப்பவைகளாகவுள்ளன. நாம் ஏலவே சுட்டிக்காட்டிய ‘திறந்த ஆய்வு முறை’யினால் விளைந்ததே இவ்வாறான கருத்துக்களாகும். மேலய நாட்டு இறக்குமதியான இவ்வாய்வு முறை துரதிஷ்ட வசமாக அரபு நாடுகளுக்குள்ளும் நவீன கல்வி முறையெனும் பெயரில் நுழைந்து விட்டது. இஸ்லாம் தொர்பான செய்திகளை ஆராயும் போது, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அகீதா பற்றிய விடயங்களை ஆய்வு செய்யும் போது இவ்வாறான முறைமைகள் ஒருக்காலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதைத் தெளிவாகப் புரிதல் அவசியமாகின்றது.

இதை இன்னும் தெளிவாக விளக்குவதாயின், செய்யித் குத்ப் அவர்கள் التصوير الفني في القرآن الكريم (அல்குர்ஆனில் உருவகக் கலை) என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர் ‘உருவகக் கலை பற்றி நாம் அல்குர்ஆனில் பார்க்கும் போது அகீதாவை சற்று ஒரு பக்கமாக வைத்து விட்டு சுதந்திரமாக ஆய்வு செய்வோம்.’ என்று கூறுகின்றார். மற்றோரிடத்தில் மூஸா நபி பற்றிப் பேசும் போது ‘கோத்திர வெறி பிடித்தவர்’ என்று கூறுகின்றார். நபிமார்கள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையை ஒரு புறம் வைத்து விட்டு மூஸா (அலை) ஆரம்பத்தில் ஒருவரைத் தாக்கியமை, ஹாரூன் (அலை) அவர்களின் தாடியைப் பிடித்து இழுத்தமை போன்ற செய்திகளையெல்லாம் பார்த்தால் இவ்வாறான ஒரு முடிவை எட்டலாம். ஆனால் இவ்வாறான அவதானங்கள் ஆய்வு எனும் பேரில் இஸ்லாமிய நம்பிக்கைகளிலேயே குறைகாணும் அபாயகரமான முடிவுகளை ஏற்படுத்தவல்லது என்பதால் முற்றாகவே தவிர்க்கப் பட வேண்டியனவாகின்றது. குறிப்பாக இஸ்லாம் பற்றிய விமர்சனக் கருத்துக்களனைத்தும் இவ்வாறான ஆய்வுகளால் பிறந்தவைதான். ஆகவே இஸ்லாம் என்பது ஒரு மனிதனின் இரத்தத்தோடு இரண்டரக் கலந்ததாகும். எந்த சந்தர்ப்பத்திலும் அதைப் பிரித்தெடுப்பதென்பது நடைபெறவே கூடாதவொன்றாகும் என்பதை மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

நபித்தோழர்களின் நேர்மையிலேயே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் தங்கியுள்ளன.

நபித்தோழர்கள் பற்றி ஆய்வு செய்யும் போது, அல்குர்ஆன் அவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது? ஹதீஸ் அவர்கள் தொடர்பில் என்ன கூறுகின்றது? என்ற இரு பெரும் மூலாதாரங்களின் அடிப்படையில்தான் நபித்தோழர்கள் தொடர்பான ஆய்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அல்லாஹ் ஒரு சமுதாயத்தினரை ‘மோசமானவர்கள்’ என்று  சொல்லிவிட்டால். அவர்கள் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் நாம் அவர்களை ‘மோசமானவர்கள்’ என்றே கூறுவோம்.

 அதே வேளை அல்லாஹ் ஒரு சமூகத்தை ‘நல்லவர்கள்’ என்று கூறிவிட்டால் அவர்கள் என்ன தீமைகள் செய்திருந்தாலும் அவர்களை நாமும் ‘நல்லவர்கள்’ என்றே சொல்வோம். ஏனெனில் நடைபெற்றவைகளை வைத்தே ஒருவரை நல்லவர், கெட்டவர் என்று நாம் தீர்மானிப்போம். நடக்கப் போகின்ற விடயங்களை வைத்து யாரையும் நல்லவர், கெட்டவர் என முடிவு செய்ய நம்மால் முடியாது. ஏனென்றால் நடக்கப் போவன பற்றிய அறிவு நமக்குக் கிடையாது. நடந்தவை, நடைபெறவிருப்பவை அனைத்துமே தெரிந்தவன் ஒருவனே. ஆகவே அல்லாஹ் ஒருரை நல்லவர் என்று சொன்னால் அவர் செய்கின்ற நன்மைகள் அல்லாஹ்வுக்குத் தெரிந்திருப்பதைப் போல அவருடைய தீமைகளும் அல்லாஹ்வுக்குத் தெரியும் எனவே நன்மை, தீமை இரண்டும் தெரிந்துதான் அல்லாஹ் அவரை நல்லவர் என்று சான்று பகர்கின்றான்.

 இதைப் போன்றுதான் நபியவர்களின் மரணத்துக்குப் பின்னால் நபித்தோழர்களுக்குள் என்னென்ன ஏற்படும் என்பது பற்றியும், அபூபக்ர் (ரழி) உமர் (ரழி), உத்மான் (ரழி), அலீ (ரழி) போன்றோரினால்  நடைபெறும் தவறுகள், பிழைகள் பற்றியும் அல்லாஹ் மிக அறிந்தவனாகும். எனவே அவர்களிமுள்ள தவறுகள், பிழைகள் பற்றிய அறிவோடுதான் அல்லாஹ் அவர்களை ‘சிறந்தவர்கள்’ எனக் கூறிள்ளான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ‘ஆயிஷா (ரழி) அவர்கள் தூய்மையானவா’; என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான் என்றால் அது நேற்றைய தூய்மை மட்டும் குறிக்காது நாளைய தூய்மையையும் குறிக்கும். ‘நம்பிக்கையாளர்’ என அல்லாஹ் ஒருவரைக் கூறினால் நம்பிக்கை விடயத்தில் அந்நபர் நம்பகமானவர் என்பது உறுதியாகிவிடுகின்றது. அவ்வாறுதான் அல்லாஹ் ஒருவரை ‘தூய்மையானவர்’ என்று சாட்சி சொல்லிவிட்டால் மனிதனென்ற அடிப்படையில் சில தவறுகள் அவரிடம் காணப்பட்டாலும் அவர் கெட்டுப் போகமாட்டார். இதை பின்வருமாறு அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘அல்லாஹ் அவர்களை நல்லவர்கள் என்று சொல்லும் போதே அவர்கள் தவறு செய்வார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும்’.

நபித்தோழர்கள் சிறப்புகளைப் பேசும் குர்ஆனிய வசனங்கள்

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا الفتح : 18

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அவன் அருளினான். அவர்களுக்கு சமீபத்திலிருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்பத்ஹ் : 18)

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். என்ற வாசகத்தின் மூலம் அந்த முஃமின்கள் ஹுதைபியாவில் பைஅத் செய்த நபித்தோழர்கள்தான் என்பதை அல்லாஹ் கோடிட்டுக்காட்டுகின்றான். தொடர்ந்து அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான் என்றும் கூறுகின்றான். அல்லாஹ் அறிந்தான் என்று வரும் வசனங்களை எவ்வாறு விளங்க வேண்டுமென்றால் அவர்களின் உள்ளங்களில் இருப்பவை பற்றி அல்லாஹ்வுக்கு முன்கூட்டியே தெரியும். அவர்களின் செயல்பாட்டில் அவற்றை வெளிக்கொணர்வதற்கே அல்லாஹ் இந்த வார்த்தையைப் பிரயோகிப்பான். இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், அல்லாஹ் ஒருவரைப் படைத்து உலகில் அவரை வாழவிடாது நரகத்தில் போடுகின்றான் என வைத்துக்கொள்வோம். உடனே அம்மனிதர் அல்லாஹ்விடம் ‘எதற்காக என்னை நீ நரகில் போடுகின்றாய்?’ என்று கேட்கின்றார். அதற்கு அல்லாஹ் ‘எனது அறிவில் நீ பாவியென்று தெரிகின்றது அதனால்தான் உன்னை நரகில் போடுகின்றேன்’ என்று சொல்கின்றான் என்றால் அந்த மனிதனுக்கு நான் எவ்வாறு நரகவாதியானேன் என்பது பற்றி எதுவும் தெரியாது போகலாம். எனவேதான் அல்லாஹ் ஒருவனை வாழ வைத்து நாளை மறுமையில் அவன் செய்தவற்றை அவனாகவே ஏற்றுக்கொள்ள வைப்பதாகச் சொல்கின்றான். அவர்களாகத் தமது பாவங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே நரகில் போடுவதாகச் சொல்கின்றான்.

صحيح البخاري 4840- عَنْ جَابِرٍ قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ

ஹுதைபிய்யா நாளில் நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்
அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி)

ஆதாரம் : புஹாரி 4840

முன்னர் பார்த்த சூறா பத்ஹ் 18 ம் வசனத்தையும் இந்த ஹதீஸையும் சேர்த்துப் பார்க்கும் போது ஹுதைபிய்யா நாளில் நபியவர்களுடன் பைஅத் செய்த ஆயிரத்து நானூறு நபித்தோழர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான் ஆகையால் இந்த ஆயிரத்து நானூறு பேரும் சுவனம் செல்பவர்கள் என்று இலகுவாய் விளங்கலாம். கீழே வரும் ஹதீஸும் இதை மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

صحيح مسلم 6560 – حَدَّثَنِى هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ أَخْبَرَتْنِى أُمُّ مُبَشِّرٍ أَنَّهَا سَمِعَتِ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ عِنْدَ حَفْصَةَ  لاَ يَدْخُلُ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ. الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا …….’

அல்லாஹ் நாடினால் அந்த மரத்தினடியில் பைஅத் செய்தோரில் ஒருவரும் நரகம் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி)

ஆதாரம் : முஸ்லிம் 6560

ஆகவே ஹுதைபியாவில் நபியவர்களுடன் பைஅத் செய்த ஆயிரத்து நானூறு நபித்தோழர்களும் நரகம் செல்லமாட்டார்கள். சுவனம் செல்வார்கள் என்பது உறுதியாகின்றது.

நபித் தோழர்களின் தன்மை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு சொல்கின்றான்.

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ……..’ الفتح : 29

முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இறக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூஉ, ஸஜ்தா செய்வோராக நீர் அவர்களைக் காண்பீர். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் விளைவாக அவர்களின் முகத்தில் இருக்கும். (அல் பத்ஹ் : 29)

இந்த வசனத்தில் நபியவர்களோடிருந்த நயவஞ்சகர்கள் தவிர்ந்த அனைத்து நபித்தோழர்களையும் அல்லாஹ் பாராட்டியுள்ளான். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இறக்கம் மிகுந்தும் இருக்கின்றனர் என்று அல்லாஹ் நபித்தோழர்களின் தன்மையைக் கூறுகின்றான். இத்தகைய பண்பிலும் தன்மையிலும் அவர்களுக்குப் பின்னால் வருபவர்கள்; அவர்களைப் பின்பற்றுவார்கள் எனவும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.(குறிப்பு: நாம் சற்று முன்னர் பார்த்த சூறா பத்ஹ் 29ம் வசனத்தில்; அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் விளைவாக அவர்களின் முகத்தில் இருக்கும் எனக் கூறப்படுவது நெற்றியிலிருக்கும் தழும்பைக் குறிக்கவில்லை. மாறாக ஸஜ்தா செய்வதால் ஏற்படுகின்ற களைப்பை, வாடலைத்தான் அது குறிக்கின்றது. முகத்தை வைத்து அடையாளங் காண்பது பற்றிக் கூறும் இன்னும் சில வசனங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது இதைத் தெளிவாக விளங்கலாம்.)

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ التوبة : 100

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விடயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்……‘ (தவ்பா : 100)

நபித்தோழர்கள் பற்றி மேலும் அல்லாஹ் கீழுள்ளவாறு சிறப்பித்துக் கூறியுள்ளான்.

لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ (8) وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ  الحشر : 8 ، 9 ، 10

‘தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட ஹிஜ்ரத் செய்த ஏழைகளுக்கும் (உரியது). அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள். அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமக்காக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ளமாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். அவர்களுக்குப்பின் வந்தோர் ‘எங்கள் இறiவா எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே எங்கள் இறைவா நீ இறக்கமுடையோன்ளூ நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுகின்றனர்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.(ஹஷ்ர்-8,9,10)

நபித்தோழர்களிடம் காணப்பட்ட தாராளத் தன்மை, அல்லாஹ்விடமுள்ள சிறப்புக்களுக்காக எதையும் இழக்கும் அவர்களின் துணிவு போன்றன பற்றி இவ்வசனம் அழகாகச் சொல்வதுடன் நபித்தோழர்களுக்குப் பின்னால் வருவோர் அவர்கள் மீது குரோதமோ, காழ்ப்புணர்வோ கொள்ளாது அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடவேண்டும் என்பதையும் அவர்கள் மீதான கடமையாக வேண்டிநிற்கின்றது. நபித்தோழர்களை ஏசிய ஷீஆக்களைப் பார்த்து மேலுள்ள வசனத்தின் அடிப்படையில் ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

صحيح مسلم – 7724 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَتْ لِى عَائِشَةُ يَا ابْنَ أُخْتِى أُمِرُوا أَنْ يَسْتَغْفِرُوا لأَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَسَبُّوهُمْ

நபித்தோழர்களுக்குப் பாவ மன்னிப்புத் தேடுமாறு இவர்கள் ஏவப்பட்டார்கள் ஆனால் இவர்களோ அவர்களுக்கு ஏசிக்கொண்டிருக்கின்றார்கள்.

அறிவிப்பவர் : ஹிஷாம் பின் உர்வா . ஆதாரம் : முஸ்லிம் 7724

நபித்தோழர்கள் அனைவரும் சிறந்தவர்களே என்பதனை மேலும் வலுவூட்டுவதாக பின்வரும் வசனம் அமைகின்றது.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ  التوبة : 100

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விடயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்……‘ (தவ்பா : 100)

இந்த வசனத்தில் நல்ல விடயத்தில் அவர்களைப் பின்தெர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுவது நபித்தோழர்களிடம் சில தவறுகள், கறைகள் காணப்பட்டாலும் அதற்காக அவர்களை ஏசாது அவர்களிடமுள்ள நல்லவற்றைப் பின்பற்றுவார்கள் என்ற கருத்திலேயே இடம்பெறுகின்றது. மெலும் இவ்வசனத்தில் இடம்பெறுகின்ற ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விடயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் என்ற வாசகமானது முஹாஜிர்கள், அன்ஸார்கள், மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவியவர்களாகிய முழு நபித்தோழர்களையுமே முலாவதாகக் குறிக்கின்றது. நல்ல விடயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் என்ற வாசகம் இன்றுள்ளவர்களையும்தான் குறிக்கின்றது என்று சொன்னாலும் மேலே சுட்டிக்காட்டப்பட்டதைப் போல மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் என்ற பிரிவினருக்குப் பின்னால்தான் அதன் பின்னால் வாழ்ந்த, தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்கள் போன்றோர் அவ்வாசகத்தில் உள்ளடங்குவார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

நபித்தோழர்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள்தான் என்றிருந்தாலும் மக்கா வெற்றிக்கு முன்னர் இஸ்லாத்தைத் தழுவியவர்களும்,  மக்கா வெற்றிக்குப் பின்னர் இஸ்லாத்தைத் தழுவியவர்களும் சமமாகமாட்டார்கள் என்பதை அல்லாஹ் கீழுள்ளவாறு கூறுகின்றான்.

لَا يَسْتَوِي مِنْكُمْ مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُولَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ الحديد : 10

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாகமாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல் ஹதீத் :  10)

மக்காவெற்றிக்கு முற்பட்ட காலமானது மிகக் கடுமையான சோதனைகள் நிறைந்ததாகும். அக்காலப் பகுதியில் இஸ்லாத்தைத் தழுவுவதென்பது மிகப்பெரும் போராட்டமாகும். ஆகவேதான் அல்லாஹ் உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாகமாட்டார்கள் என்று அதை சிறப்பிக்கின்றான.; இதைப்போன்றுதான் தபூக் யுத்தம் பற்றி அல்லாஹ் கீழுள்ளவாறு புகழ்கின்றான்.

لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ  التوبة : 117

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப்பின்பற்றியவர்களையும் மன்னித்தான். (தௌபா : 117)

இதைப்போன்றுதான் அல்லாஹ் ஹுதைபியாவைப் பாராட்டியுள்ளான். பத்ர் களத்தை மெச்சியுள்ளான். இவயைனைத்துமே மிக நெருக்கடிவாய்ந்த கால கட்டங்களில் இடம் பெற்ற போற்றத்தகு தியாக நிகழ்வுகளாகும். ஆகையால்தான் அவற்றை அல்லாஹ் போற்றிச் சொல்கின்றான். அதைப்போன்றுதான் ‘மக்கா வெற்றிக்குப் பின்னால் ஹிஜ்ரத் கிடையாது’ என்று நபியவர்கள் சொன்னார்கள். ஏனென்றால் ஹிஜ்ரத் என்பது இஸ்லாத்தை ஏற்று அதை அமுல்படுத்த முடியாதளவுக்கு நெருக்கடிவாய்ந்த தருணங்களில் ஊரைத் துறந்து பாதுகாப்பான ஒரு பிரதேசத்தை நோக்கிச் செல்வதாகும். மக்கா வெற்றிகொள்ளப்பட்டதன் பின்னர் அப்படியான நெருக்கடியான எந்தவிதமான அசாதாரண சூழ்நிலைகளும் அங்கிருப்பதற்கில்லை. ஆகவே இப்போது ஹிஜ்ரத் செய்வது அர்த்தமற்றது என்பதுடன் தியாகத்துக்குரியதன்று. எனவே யாரெல்லாம் நபியவர்களை முஃமினாக சந்தித்து அதே நிலையில் மரணித்தாரோ அவர்களனைவரும் நபித்தோழர்களாகும். அவர்களனைவருமே சுவனம் செல்பவர்களாகும். ஆனாலும் அவர்கள் நரகம் நுழையமாட்டார்கள் என்று கூறமுடியாது. எதுவாயினும் அவர்களனைவரும் சுவனம் செல்பவர்கள் என்பது உறுதியாகும்.

மேலே நாம் தொட்டுக்காட்டிய அனைத்து வசனங்களுமே நபித்தோழர்களை மாத்திரம் குறிக்கக் கூடியவைகளாகும். எத்தகைய சூழ்நிலையிலும் இஸ்லாத்துக்காக சொத்து, செல்வம் என்பவற்றுக்கப்பால் தங்களையே அவர்கள் அர்ப்பணித்தார்கள் என்பதால் அவர்களின் சிறப்புக்கள் தனித்துவமானது. அவர்களுக்குப் பின்னால் வருபவர்கள் இஸ்லாத்துக்காவென்று எத்துனை தியாகங்களைத்தான் புரிந்தாலும் ஒருபோதும் அவை நபித்தோழர்களின் தியாகத்துக்கு சமமாகாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபித்தோழர்களின் சிறப்புக்கள் பற்றிப் பேசும் ஹதீஸ்கள்

பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்டவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்பதைக் கீழுள்ள ஹதீஸ் கூறுகின்றது.

صحيح البخاري 3983 – حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ قَالَ سَمِعْتُ حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا مَرْثَدٍ الْغَنَوِيَّ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ وَكُلُّنَا فَارِسٌ قَالَ انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ فَإِنَّ بِهَا امْرَأَةً مِنْ الْمُشْرِكِينَ مَعَهَا كِتَابٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى الْمُشْرِكِينَ فَأَدْرَكْنَاهَا تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا حَيْثُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا الْكِتَابُ فَقَالَتْ مَا مَعَنَا كِتَابٌ فَأَنَخْنَاهَا فَالْتَمَسْنَا فَلَمْ نَرَ كِتَابًا فَقُلْنَا مَا كَذَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ لَنُجَرِّدَنَّكِ فَلَمَّا رَأَتْ الْجِدَّ أَهْوَتْ إِلَى حُجْزَتِهَا وَهِيَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ فَأَخْرَجَتْهُ فَانْطَلَقْنَا بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلِأَضْرِبَ عُنُقَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ حَاطِبٌ وَاللَّهِ مَا بِي أَنْ لَا أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ الْقَوْمِ يَدٌ يَدْفَعُ اللَّهُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي وَلَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلَّا لَهُ هُنَاكَ مِنْ عَشِيرَتِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَ وَلَا تَقُولُوا لَهُ إِلَّا خَيْرًا فَقَالَ عُمَرُ إِنَّهُ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلِأَضْرِبَ عُنُقَهُ فَقَالَ أَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ فَقَالَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ إِلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ وَجَبَتْ لَكُمْ الْجَنَّةُ أَوْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ فَدَمَعَتْ عَيْنَا عُمَرَ وَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத்  அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், ‘நீங்கள் ரவ்ளத்து காக்என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், ‘கடிதம் (எங்கே? அதை எடு)என்று கேட்டோம். அவள், ‘எம்மிடம் கடிதம் எதுவுமில்லைஎன்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு) அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) (ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்!என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை கூறினார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர்(ரலி), ‘இவர் அல்லஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’… அல்லது உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்’… என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) தம் கண்கள் கண்¡ர் உகுத்துக் கொண்டிருக்க, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ(பின் அபீ தாலிப் (ரழி)

அதாரம் : புஹாரி 3983.

‘அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் தூய எண்ணத்தை அறிந்து (அவர்களை நோக்கி), ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்’ என நபியவர்கள் சொல்லியிருப்பதிலிருந்து பத்ரில் பங்கேற்ற 313 பேரும் சுவனவாதிகள் என்பது நிஜமாகின்றது. ஆனாலும் அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று கூறமுடியாது. நபித்தோழர்களும் சில தவறுகளைச் செய்யலாம் ஆனால் அவர்களின் நோக்கம் இஸ்லாத்தைக் காட்டிக்கொடுக்க வேண்டும் அல்லது இஸ்லாத்தை விற்றுப்பிழைக்க வேண்டும் என்பதல்ல. ஆயிஷா (ரழி) அவர்களுக்கு அவதூறு சொல்லியவர்களில் ஒருவரான மிஸ்தஹ் என்ற நபித்தோழர் பத்ரில் கலந்து கொண்ட ஒருவராவார். உபை பின் சலூல் என்ற முனாபிக் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது இட்டுக்கட்டிச் சொன்னதை நம்பித்தான் இந்த நபித்தோழரும் அவர்கள் மீது அவதூறு சொன்னாரே தவிர ஆயிஷா நாயகியை சீரழிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் அவரிடமிருக்கவில்லை. எனவேதான் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் தூய எண்ணத்தை அறிந்து (அவர்களை நோக்கி), ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்  என்று அல்லாஹ் கூறியுள்ளான் என நபியவர்கள் சொன்னார்கள். எதேச்சையாக அவர்களால் சில தவறுகள் விளைந்தாலும் அவர்களுடைய உள்ளங்கள் அப்படிப்பட்டதல்ல. அல்லாஹ்வை அஞ்சி தாம் செய்த தவறுகளுக்காய் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகின்ற தன்மையை இயல்பாகக் கொண்டவைகளே அவர்களின் உள்ளங்களாகும். நபித்தோழர் ஹாதிப் அபீ பல்தஆவிடம் ஏன் நீ இவ்வாறு செய்தாய்என்று நபியவர்கள் கேள்வி கேட்டதிலிருந்து அந்த நபித்தோழர் ஏதேனும் ஓர் உள்நோக்கத்தை வைத்துக்கொண்டு அதைச் செய்திருக்கமாட்டார் எனத் தெரிந்துதான் நபியவர்கள் அவ்வாறு அவரிடம் காரணத்தை விசாரித்துள்ளார்கள். வேரொருவாராயிருந்தால் இச்செயல் ஒரு தேசத் துரோகமாகப் பார்க்கப்பட்டு அவர் தண்டிக்கப்பட்டிருப்பார் என்பதை விளங்கலாம்.

‘உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்’… என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் சொன்னதிலிருந்து அந்த நபித்தோழர்களுக்கு மறுமையில் அல்லாஹ் மன்னிப்பு வழங்குவான் என்பது உறுதியாகின்றது. ஆனால் அவர்களால் இவ்வுலகில் குற்றங்கள் ஏற்பட்டலாம் அவ்வாறு குற்றம் செய்தவர்கள் நபியவர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னாலும் தண்டனை பெற்றுள்ளார்கள். தான் நாடியவர்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகின்றான் இதில் யாரெல்லாம் உள்ளடங்குவார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது ஆனால் அல்லாஹ் மன்னிப்பு வழங்குவோரில் நபித்தோழர்கள் நிச்சயமாக முதன்மை பெறுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதுவே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

صحيح البخاري 6428- حَدَّثَنِي زَهْدَمُ بْنُ مُضَرِّبٍ قَالَ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ قَالَ عِمْرَانُ فَمَا أَدْرِي قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ قَوْلِهِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا

உங்களில் (-மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் இதற்குப் பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறையினரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்தம் பின் முழர்ரிப்

ஆதாரம் : புஹாரி 6428

இந்த ஹதீஸில் உங்களில் (-மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர் என்று நபியவர்கள் கூறியிருப்பது ஏனைய சமூகங்களிலிருந்து நபித்தோழர்களை வேறுபடுத்திக் காட்டக் கூடியதும், நபித்தோழர்களிடம் மட்டுமே காணப்படக்கூடியதுமான சில பண்பியல்புகள் பற்றிக் குறிக்கின்றது. நபித்தோழர்களுக்கும் பிற சமூகங்களுக்குமிடையிலான வித்தியாசங்கள் பற்றிப் பார்ப்போமானால்  எந்நேரமும் அல்லாஹ்வை அஞ்சி, அவனை வழிபடுதல், தவறென்று ஒன்றைத் தெரிந்தால் அதை உடனே விட்டுவிடுதல், திரும்பவும் அதே பாவத்தைத் தொடராதிருத்தல், பாவத்தைக் கண்முன்னே தடுத்தல் அதில் எவரையும் அஞ்சாதிருத்தல் போன்றன அவர்களின் இயல்பாகவிருந்தன ஆனால் அவர்களுக்குப்பின்னால் வந்தவர்களிடம் இவை இயல்பாகக் காணப்படவில்லை. பாவங்களை இனம் கண்டும் அவற்றை உடனே விட்டுவிடும் தைரியம் இவர்களிடம் காணப்படவில்லை. அவ்வாறு விட்டாலும் மீண்டும் அதே பாவத்தைத் தொடரும் பலவீனம் இவர்களிடம் இயல்பாகவே காணப்படுகின்றது. பொதுவாகச் சொல்வதாயின் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை இயல்பாகவே பின்பற்றும் பக்குவம் நபித்தோழர்களிடம் காணப்பட்டது ஆனால் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களிடம் இப்பண்பு இருக்கவில்லை எனக் கூறலாம். ஆகவேதான் நபித்தோழர்கள் என்னதான் தவறுகள் செய்திருந்தாலும் அவற்றுக்காக அல்லாஹ்விடம்  பிழைபொறுக்கத் தேடுவதையும், அவர்களிடம் காணப்பட்ட இந்த சிறப்புக்களைப் பின்பற்றுவதையும் அவர்களுக்குப்பின்னால் வந்த நம்மைப் போன்றவர்களுக்கு  அல்லாஹ் கடமையாக ஆக்கியுள்ளான். அதை இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான்.

நபித்தோழர்களின் சிறப்பைக் கூறும் மேலும் ஓரு ஹதீஸ் கீழுள்ளவாறு இடம் பெறுள்ளது.

صحيح مسلم6629 – عَنْ سَعِيدِ بْنِ أَبِى بُرْدَةَ عَنْ أَبِى بُرْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ……….النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ.

நட்சத்திரங்கள் வானத்துக்குப் பாதுகாப்பாகும். அவை அழிந்து விட்டால் வானத்துக்கு வாக்களிக்கப் பட்டது வந்து விடும். நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாகும். நான் சென்று விட்டால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும்.  அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும்.
அறிவிப்பவர் : அபூ புர்தா

ஆதாரம் : முஸ்லிம் 6629

நபியவர்களின் மரணித்துக்குப் பின்னர் நபித்தோழர்களுக்கு பல்வேறுபட்ட இன்னல்கள் ஏற்படும் என்பதை இந்த நபிமொழி முன்னறிவிப்புச் செய்கின்றது அதனால்தான் நபியவர்கள் தனது தோழர்களிடம் ‘எனக்குப் பின்னால் பலதரப்பட்ட துன்பங்களை சந்திப்பீர்கள் நாளை மறுமையில் ஹவ்ழுல் கவ்ஸர் தடாகத்தில் என்னை சந்திக்கும் வரை அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். வரலாற்றைப் படிக்கும் போது நபியவர்களின் இந்த தீர்க்கதரிசனம் நிதர்சனமாகியதைக் காணமுடிகின்றது. நபித்தோழர்கள் சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவைகளாகும்.  ‘என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும்.  அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும்’ என்று நபியவர்கள் சொல்லியதின் எதிரொலியாக நபித்தோழர்கள் இருக்கும் காலம் வரைக்கும் இஸ்லாத்துக்குள் ஷிர்க்,பித்அத் எதுவும் எழுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. அவ்வாறு ஏதும் நுழைந்தாலும் உடனேயே அவை நபித்தோழர்களால் சுட்டிக்காட்டப்பட்டு முளையிலே நசுக்கப்பட்டன. என்றைக்கு அவர்களனைவரும் மண்ணறை சென்றார்களோ அன்றிலிருந்து இந்த சமூகத்துக்குள்  ஷிர்க்,பித்அத் போன்ற அனைத்துமே முளைவிடத்துவங்கி, இன்றுவரை அவை கோளோச்சிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியாயின், இந்த உம்மத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கும் நபித்தோழர்கள் மிகப்பெரும் அரணாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதுவே அதன் அர்த்தமாகும். அதைத்தான் இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.

நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவதை கீழ்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது.

مصنف عبد الرزاق  20710 – عن عبد الله بن الزبير أن عمر بن الخطاب قام بالجابية خطيبا فقال ‘………..أكرموا أصحابي فإنهم خياركم ………’

எனது தோழர்களை கண்ணியப்படுத்துங்கள்அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஸுபைர் (ரழி).

ஆதாரம்: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 20710

நபித்தோழர்களை நோவினை செய்வது நபியை நோவினை  செய்வதைப்போன்றது அதைக் கீழ்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

سنن ابن ماجه   2363 – عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ خَطَبَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالْجَابِيَةِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِينَا مِثْلَ مُقَامِي فِيكُمْ فَقَالَ احْفَظُونِي فِي أَصْحَابِي

எனது தோழர்களில் என்னைப் போணுங்கள்

அறிவிப்பவர் : உமரிப்னு கத்தாப் (ரழி), தாரம் : இப்னுமாஜா 2363  

( முற்றும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts