Monday, May 6, 2024

மாதுலம் பழத்தின் விதையை சாப்பிட்டால் சைத்தான் விரண்டோடுவான் என்பது சரியா?

 “மாதுலம் பழத்தின் விதையொன்றை சாப்பிட்டால் வஸ்வாஸை ஏற்படுத்தும் ஷைத்தான் 40 நாட்கள் நோய்வாய்ப்படுவான்” என்று ஒரு செய்தியை நபிகளார் சொன்னதாக மக்களில் சிலர் நம்பிவருகிறார்கள் .

ஆனால் நபியவர்கள் அப்படிச் சொன்னதாக ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி கூடக் கிடையாது.

மாறாக அலீ ரழி அவர்கள் அப்படிச் சொன்னதாக ஒரு செய்தி காமில் பில் லுஅபா 3-248 என்ற அறிவிப்பாளர்கள் பற்றிய நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸுலைமான் இப்னு அம்ர் என்ற பொய்யர் இடம் பெறுவதனால் அலியவர்கள் சொன்னதாக புனையப்பட்ட செய்தியாகவே இதனை நாம் கருத வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts